மக்கள் குரல் ... ஒலித்திடும் காரைக்குடி


GPF - வைப்பு நிதி 


இம்மாதம் GPF வைப்புநிதி விண்ணப்பிக்க விரும்புவோர் 15/05/2015க்குள் ESS எனப்படும் ERP  இணையசேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இணையத்தில் விண்ணப்பித்து விட்டு விண்ணப்பத்தை அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட
 கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும். 

இது சம்பந்தமாக நமக்கு 
இரண்டு  கேள்விகள் எழுவது இயல்பே....

ஆனியிலே சேதி சொல்லி...
 ஆவணியிலே தேதி சொல்லும் மன்னவனைப்போல்... 
மாநில நிர்வாகம் GPF விண்ணப்பிக்க ஒவ்வொரு மாதமும் 
ஒரு தேதி சொல்லி வருகின்றது.  ERP தற்போது இயல்பு நிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில்  ஊழியர்கள் 

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் 
GPF விண்ணப்பிக்க வேண்டும். 
20 தேதிக்குள் GPF  பட்டுவாடா செய்யப்படும்...
 என மாநில நிர்வாகம்  குறிப்பிட்ட   தேதி  சொல்ல வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர  வைப்பு நிதி வேதனை களையப்படும்.

ERP என்பது TOWARDS PAPERLESS WORLD  
என கூறப்படுகின்றது.  
தாட்களற்ற தரமான சேவை.. 
இதுவே ERPயின் தாரக மந்திரம்.

இந்நிலையில் GPF விண்ணப்பிக்கும் தோழர்கள் ERPயிலும் விண்ணப்பித்துவிட்டு அதன் அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அச்சிட்ட விண்ணப்பம் கணக்கு அதிகாரிக்கு வரவில்லையெனில் GPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. சென்ற மாதம் காரைக்குடியில் ஏறத்தாழ 
20 விண்ணப்பங்கள் ESSல் விண்ணப்பித்த பின்னும் PRINTED APPLICATION வரவில்லையென்ற காரணத்திற்காகவே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மாநில நிர்வாகம் நடத்திய WEBINARலும் இதுவே  வலியுறுத்தப்பட்டுள்ளது. நம்முடைய தோழர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணி புரிகின்றனர். அங்கெல்லாம் அச்செடுக்கும் வசதி இல்லை. பெரிய ஊர்களிலே கூட கணிணி வசதி இல்லை.. 
PRINTER அச்சு இயந்திர வசதி இல்லை. பல JCMகளில் மணிக்கணக்கில் இதுவே பெரும் பிரச்சினையாக அலசப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் ESSல் விண்ணப்பித்தாலும் அச்சு எடுத்து மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள் தாமதமாகி விடுகின்றது. 

எனவே நமது கேள்வி...
இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி வந்த பின்னும் 
தாட்களில் அச்செடுத்து அனுப்பும் முறை தொடர வேண்டுமா?

ONLINE திருமணத்திற்கு 
அய்யரும்...
அச்சிட்ட பத்திரிக்கையும் தேவையா?
நிர்வாகம் சிந்திக்க வேண்டும்...