அள்ளி தந்த பிஎஸ்என்எல்.... கிள்ளி தந்த தனியார் நிறுவனங்கள் ...

ஒரு வாரம் பிஎஸ்என்எல் இலவச சேவை: ரவிசங்கர் பிரசாத்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதையொட்டி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஒரு வாரத்துக்கு இலவசமாக தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
பூஞ்ச் மாவட்டம் தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் கணிசமான அளவு செல்போன் சேவை சீராகி உள்ளதாகவும் அவர் கூறினார்.
தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் சனிக்கிழமை இதனைத் தெரிவித்த ரவிசங்கர் பிரசாத், மேலும் கூறியதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தச் சலுகையை அளிக்க வேண்டும் என்று தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமும் கோரினோம். அதனை ஏற்று தினமும் 60 நிமிடங்கள் இலவசமாகப் பேசிக் கொள்ள தனியார் நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன என்றார்.