35 பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளன:

சுமார் 35 பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகள் காலியாக உள்ளதாக மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை அவர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய நிலக்கரி நிறுவனம், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல், தேசிய நீர்மின் நிறுவனம், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை, தேசிய ஜவுளித்துறை நிறுவனம், மின்சார நிதி நிறுவனம், ஐஆர்சிடிசி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய விமான நிலைய ஆணையம் உள்ளிட்ட 35 பொதுத் துறை நிறுவனங்களில் 25 தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளும், 8 நிர்வாக இயக்குநர் பதவிகளும், 2 தலைவர் பதவிகளும் காலியாக உள்ளன.
 ராஜிநாமா, உயிரிழப்பு, பணியிட மாற்றம், பணிக்காலம் நீட்டிக்கப்படாதது போன்ற காரணங்களால் இந்த இடங்கள் காலியாக உள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.